ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், “நாம் ஈரானுடன் செய்துகொள்ளும் இந்த ஒப்பந்தம், பராக் ஒபாமா மற்றும் ஸ்லீப்பி ஜோ பைடன் ஆகியோரால் எழுதப்பட்டு, நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக இதுவரை செய்யப்பட்ட மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்றான, பொதுவாக ‘ஈரான் அணு ஒப்பந்தம்’ என்று குறிப்பிடப்படும் JCPOA-வை விட மிகவும் சிறந்ததாக இருக்கும்.
அவர்கள் உண்மையில் 1.7 பில்லியன் டாலர்களை ‘பச்சை’ பணமாக, ஒரு போயிங் 757 விமானத்தில் ஏற்றி, ஈரானியத் தலைவர்கள் தாங்கள் விரும்பியபடி செலவு செய்வதற்காக ஈரானுக்கு அனுப்பி வைத்தனர். அவர் வாஷிங்டன் டி.சி., வர்ஜீனியா மற்றும் மேரிலாந்தில் உள்ள வங்கிகளில் இருந்த அனைத்து பணத்தையும் காலி செய்தார்.
அந்த வங்கியாளர்கள், தாங்கள் இதற்கு முன்பு இப்படி எதையும் பார்த்ததில்லை என்று கூறினர். மேலும், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஈரானுக்கு வழங்கப்பட்டன. நான் அந்த ‘ஒப்பந்தத்தை’ முடிவுக்கு கொண்டுவராமல் இருந்திருந்தால், இஸ்ரேல் மீதும், நமது நேசத்துக்குரிய அமெரிக்க இராணுவம் உட்பட மத்திய கிழக்கு முழுவதிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.