• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

மதுரையில் உயிரோடு இருக்கும் மாமியாருக்கு மருமகள் இறப்புச் சான்றிதழ் பெற்றது எப்படி? என்ன நடந்தது?

Byadmin

Aug 19, 2026


வாரிசு சான்றிதழ், மதுரை, புகார்கள், தமிழ்நாடு
படக்குறிப்பு, முத்துப்பிள்ளை

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“இதோ, நான் உயிரோடு உங்கள் கண் முன் நிற்கிறேன். ஆனால், நான் இறந்துவிட்டதாகக் கூறி எனது மருமகள் போலியான ஆவணங்கள் மூலம் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலரும் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்” எனக் கூறுகிறார் 62 வயதான மூதாட்டி முத்துப்பிள்ளை.

மதுரை, சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. இவர் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ‘உயிரோடு இருக்கும் தன்னை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

பின்னணி என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய முத்துப்பிள்ளை, “எனது கணவர் சின்னசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு உயிரிழந்தார். எனக்கு ராமசாமி, பெருமாள் என இரண்டு மகன்கள். இதில் பெருமாள் கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கும் அவரது மனைவி சுந்தரிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது” என்கிறார்.

“இந்த சுந்தரி என்பவர்தான் நான் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, எனது மகன் பெருமாளுக்கு தாய், தந்தை இல்லை எனவே தான் தான் வாரிசு என வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். போலி இறப்புச் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்திற்கு கோவில் பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலரும் முறையாக விசாரிக்காமல் ஒப்புதல் அளித்துள்ளார்.”

By admin