நம்பிக்கை இருந்தது:
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனுமோல், “நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குநரிடம் பேசும் போது ஒரு நம்பிக்கை இருந்தது, அதனால் தான் இந்தப் படத்தில் நான் நடித்தேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லோரடனும் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.
குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்தது. எனக்கு அவர் மீது கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான். இவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கு. எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் . இந்தப் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கு,” என்றார்.