• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

மாம்பழ விளைச்சல் அதிகமாகியும், விவசாயிகள் டன் கணக்கில் குப்பையில் கொட்டுவது ஏன்?

Byadmin

Jun 25, 2026


தமிழ்நாடு, மாம்பழ விவசாயிகள்

    • எழுதியவர், சண்முகப்ரியா செல்வராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோடைக் காலம் என்றதும் விடுமுறையோடு சேர்த்து பருவகாலப் பழங்களும் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக மாம்பழங்களுக்கு தனி பிரியர்கள் உண்டு என்றே கூறலாம். கோயம்பேட்டில் தற்போது ஒரு கிலோ மாம்பழம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி மாம்பழங்களை விவசாயிகள் குப்பைகளில் கொட்டிச் செல்கின்றனர். என்ன காரணம்?

தமிழகத்தில் மாம்பழம் என்றாலே நினைவுக்கு வருவது சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள்தான். அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்களும், செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு ரகங்களும், தமிழ்நாட்டில் விளைவிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த ஆண்டு, மாம்பழ விவசாயிகளுக்கு அறுவடை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். குறிப்பாக, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தோப்புகளில் இருந்து அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் குப்பைகளில் கொட்டப்பட்டன. இதற்குக் கடுமையான விலை வீழ்ச்சியே காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களின் விலை கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு பத்து முதல் இருபது ரூபாயாக இருந்ததாகத் தெரிவிக்கும் விவசாயிகள், இந்த ஆண்டு அது ஐந்து ரூபாய்க்கும் கீழே சரிந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

By admin