• Thu. Aug 20th, 2026

24×7 Live News

Apdin News

முதல்வர் விஜயின் ‘3 கோப்புகள் என் மேஜையில் உள்ளன’ பேச்சுக்கு திமுகவின் பதில் என்ன?

Byadmin

Aug 20, 2026


திமுக, தவெக, சட்டப்பேரவை

பட மூலாதாரம், Tamil Nadu Assembly

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“மூன்று துறைகளின் கோப்புகள் என் மேஜையில் உள்ளன” – இன்று சட்டப்பேரவையில், தங்கள் மீது ஆளும் அரசு வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவினர் ஆதாரம் கேட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் இன்று நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறைகள் தொடர்புடைய மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித் துறை குறித்துப் பேசினார். அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்தார்.

அப்போது இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். விவாதத்திற்கு மத்தியில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

By admin