• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி Create new Optimo Editor Promos History Settings Unsaved changes Save Publish Locked by you Created by: pradeep.krishna.ext draft (unsaved) Headline type Headline Glyphs முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி – பஞ்சாப் தொடர்ந்த

Byadmin

May 18, 2026


முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி - பஞ்சாப் தொடர்ந்து 6வது தோல்வி

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக இன்று (மே 17) நடந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது அந்த அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அதை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இது இந்த சீசனில் ஆர்சிபி பெறும் 9வது வெற்றி. 18 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணியின் ரன்ரேட் மிகச் சிறப்பாக இருப்பதால் (+ 1.065) அந்த அணி டாப் 2 இடங்களுக்குள் முடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 6வது தோல்வியை சந்தித்திருக்கிறது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத அந்த அணி, அதன்பிறகு இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது 13 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

அதிரடி காட்டிய ஆர்சிபி பேட்டர்கள்

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி - பஞ்சாப் தொடர்ந்து 6வது தோல்வி

பட மூலாதாரம், ANI

தரம்சாலாவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை.

By admin