• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

மெக்கா ஒப்பந்தம்: வங்கதேசம் இணைந்தால் இந்தியாவுக்கு சிக்கலாகுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Byadmin

Aug 23, 2026


வங்கதேசத்தின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர் கூறியதாகக் கூறப்படும் ஒரு கருத்து, இந்திய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்கா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, துருக்கி, பாகிஸ்தான், சௌதி அரேபியா ஆகிய நாடுகள், அந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு தாக்குதலையும் தங்கள் மீதான தாக்குதலாகவே கருதும்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வங்கதேசத்தின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர் கூறியதாகக் கூறப்படும் ஒரு கருத்து, இந்திய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை இரவு முதல், வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளரான ஹுமாயூன் கபீர், சௌதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார அல்லது பாதுகாப்புக் கட்டமைப்பில் வங்கதேசம் இணைவதற்கான வாய்ப்பை வரவேற்பதாக வங்கதேச சங்பாத் சங்ஸ்தாவிடம் (BSS) தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையிலான மெக்கா ஒப்பந்தத்தில் வங்கதேசமும் இணைய ஆர்வமாக இருப்பதாக ஹுமாயூன் கபீரின் இந்தக் கருத்து இந்திய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

வங்கதேசத்தின் இந்த நிலைப்பாடு, இந்தியாவுடனான நீடித்து வரும் பதற்றத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சௌதி அரேபிய பட்டத்து இளவரசரின் அழைப்பின் பேரில் வங்கதேச பிரதமரின் ரியாத் பயணம் கோடைக் காலத்திற்குப் பிறகு இறுதி செய்யப்படுமென ஹுமாயூன் கபீர் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

By admin