அவராகத்தான் வெளியேசென்றார். இரண்டாவது நிகழ்ச்சியில் நான் கொடுத்தேன். அவர் வாங்கவில்லை. பிரச்சனை செய்யவேண்டும் என செய்பவர்களிடம் என்ன பேசுவது’ என விளக்கமளித்துள்ளார்.
மேயர் பிரியா விளக்களித்தாலும் இந்த நிகழ்வு தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் மாநகராட்சி நிகழ்வின் நெறிமுறை பலருக்கு தெரியாததே.
தமிழ்நாடு அரசின் நெறிமுறைப்படி, மாநகராட்சி விழாக்களில் அதிகாரப்பூர்வ முன்னுரிமை வரிசை பின்வருமாறுதான் அமையும்.
மாநகராட்சியின் முதல் குடிமகன் மற்றும் நகர்மன்றத் தலைவர் என்பதால், மாநகராட்சி எல்லைக்குள் நடக்கும் விழாக்களில் மேயருக்கே முதல் மரியாதை மற்றும் முன்னுரிமை வழங்கப்படும். மேயருக்கு அடுத்தபடியாக, முதலமைச்சர் கலந்துகொண்டால் முதலமைச்சருக்கு, அல்லது அமைச்சருக்கு.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு அல்லது அவரது அந்தஸ்தில் உள்ள மாநகராட்சி ஆணையருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்தடுத்து எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அடுத்து துணைமேயர், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.