• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

மேற்கு வங்கத்தில் 34 லட்ச எஸ்.ஐ.ஆர் மேல்முறையீடுகளில் 1,607 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டது எழுப்பும் கேள்விகள் என்ன?

Byadmin

Apr 29, 2026


மேற்கு வங்கம்

பட மூலாதாரம், Diptendu Dutta/NurPhoto via Getty Images

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட 1,468 வாக்காளர்களின் துணைப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் வாக்காளர் பட்டியலிலிருந்து ஆறு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) கீழ் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் அமைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்தத் துணைப் பட்டியல் இரண்டாவது பட்டியலாகும். முதல் துணைப் பட்டியல் ஏப்ரல் 22 அன்று முதற்கட்டத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் 139 வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர், எட்டு பேர் நீக்கப்பட்டனர்.

எனவே, இரண்டு பட்டியல்களின் மூலமாக மொத்தம் 1,607 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், அதே சமயம் 14 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்பாயங்களில் 34 லட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த எண்கள் வியக்கத்தக்க வகையில் உள்ளன என்று இந்த மாத தொடக்கத்தில் பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

By admin