• Thu. Sep 10th, 2026

24×7 Live News

Apdin News

மேற்கு வங்கம்: துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பது தொடர்பாக தீரேந்திர சாஸ்திரியின் பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

Byadmin

Sep 10, 2026


ஹவுராவில் நடைபெற்ற ஹனுமந்த் கதா நிகழ்ச்சியில் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி

பட மூலாதாரம், @bageshwardham

படக்குறிப்பு, ஹௌராவில் நடைபெற்ற ஹனுமந்த் கதா நிகழ்ச்சியில் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பாகேஷ்வர் பாபா என அழைக்கப்படும் இந்து மத குரு தீரேந்திர சாஸ்திரிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி கொல்கத்தாவின் பவானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தீரேந்திர கிருஷ்ண கர்க் (தீரேந்திர சாஸ்திரி என்றும் அழைக்கப்படுகிறார்) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹௌரா மாவட்டத்தின் லிலுவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், துர்கா பூஜை காலத்தில் இந்துக்கள் சைவ உணவைப் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோள் மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கலாசாரம் அவமதிக்கப்படுவதாகவும், அதற்கு மாநிலத்தில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு ஆதரவு தருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மற்றொரு புறம், மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, தீரேந்திர சாஸ்திரியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.

By admin