• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு

Byadmin

Apr 22, 2026


உறவினரை வைத்தியசாலையில் பார்த்துவிட்டு வந்த தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிள் விபத்தில் நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உறவினர் ஒருவர் சிகிச்சை பெற்று வருதின்ற நிலையில் அவரை பார்வையிடுவதற்கு தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் நள்ளிரவுவேளை திருநெல்வேலகயில் இருந்து பலாலி பக்கமாக வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இதன்போது உரும்பிராய் சந்தியில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பட்டா ரக வாகனம் மோதியுள்ளது. இந்நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் அவர்களது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஏழாலை கிழக்கு, ஏழாலையை சேர்ந்த சிறீனிவாசன் பரமேஸ்வரன் (வயது 64), பரமேஸ்வரன் கஜதீபன் (வயது 23) என்பவர்களே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

அவர்களது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். குறித்த இளைஞனின் தாயாரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

The post யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு appeared first on Vanakkam London.

By admin