திருவண்ணாமலை பயணம்
டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்றார். அங்கு அருணாசலேஸ்வரர் கோவில், ரமணா ஆசிரமத்திற்கு சென்று வழிபட்டார்.
அதைதொடர்ந்து இரவு திருவண்ணாமலையில் இருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரி வந்தார். இரவு 8.30 மணிக்கு புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வந்தடைந்த அவரை கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் அமைச்சர்கள், பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாக்கு கவர்னர் கைலாஷ்நாதன் இரவு விருந்து அளித்தார். பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கி ஓய்வு எடுத்தார்.