இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், தனது நாட்டின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கையானது, அமெரிக்காவின் “ராணுவ நடவடிக்கைகளின் நீட்டிப்பு” என்பதற்கு சமம் என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் கூறினார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “ஈரானின் சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உலகம் கண்டிருக்கிறது. கடற்படை முற்றுகை என்ற போர்வையில் செய்யப்படுவது, தனது எதிர்ப்புக்கும் சுதந்திரத்திற்கும் விலை கொடுக்கும் ஒரு தேசத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் நீட்டிப்பாகும். இந்த அடக்குமுறை அணுகுமுறை தொடர்வது பொறுத்துக்கொள்ள முடியாதது,” என்று குறிப்பிட்டுள்ளார்.