வளர்ந்து வரும் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் இன்று (3) பிற்பகல் இலங்கை வந்தடைந்தனர்.
2 நான்கு நாள் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டிகளிலும் 3 உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வளர்ந்து வரும் இலங்கை அணியை மேற்கிந்தியத் தீவுகள் எதிர்த்தாடும்.
நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.
முதலாவது நான்கு நாள் போட்டி ஜூன் 8ஆம் திகதி ஆரம்பமாகும்.
இரண்டாவது நான்கு நாள் போட்டி ஜுன் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.
முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எஸ்எஸ்சி மைதானத்திலும் கடைசிப் போட்டி என்சிசி மைதானத்திலும் நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 22, 24, 26ஆம் திகதிகளில் நடைபெறும்.




The post வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர் appeared first on Vanakkam London.