• Sun. Jul 12th, 2026

24×7 Live News

Apdin News

வியட்நாம் படகு விபத்து: உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் பலியானது எப்படி? உயிர் தப்பிய பயணி தகவல்

Byadmin

Jul 12, 2026


வியட்நாம் படகு

பட மூலாதாரம், AFP via Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே நேற்று (ஜூலை 11) நடந்த படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், கேரளாவை சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மொபைல் விநியோகஸ்தர் முருக பிரபு இந்த விபத்தில் உயிரிழந்ததாக அவருடைய உறவினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இந்திய தூதரகம் எங்களிடம் தகவல் தெரிவித்தார்கள். அனைத்து வேலைகளையும் அவர்கள் தான் பார்த்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படுவது குறித்து தகவல் தெரிவிப்பதாக அவர்கள் கூறினார்கள்,” என்று தெரிவித்தார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், விபத்துக்கான காரணம் குறித்து அவசரமான விசாரணை நடத்தவும் வியட்நாம் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் ஃபாம் கியா டுக் தெரிவித்துள்ளார்.

By admin