• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

வீட்டுச் சுவரில் கிடைத்த தங்கம் – 1 கோடி டாலர் மதிப்பிலான புதையல் யாருக்கு சொந்தம்?

Byadmin

Aug 16, 2026


இந்த வாரத்தின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தங்கம் குறித்த புகைப்படங்களை உள்ளூர் காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர்.

பட மூலாதாரம், Dendermonde Local Police

படக்குறிப்பு, இந்த வாரத் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தங்கம் குறித்த புகைப்படங்களை உள்ளூர் காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர்.

    • எழுதியவர், நிக் பீக்
    • பதவி, ஐரோப்பிய செய்தியாளர்

    • எழுதியவர், மயா டேவிஸ்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வீட்டின் சுவர்களுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் நாணயங்களை தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெல்ஜியத்தில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அடித்தள சுவர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த தோராயமாக 1 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கச் சேமிப்பைக் கண்டறிந்துள்ளனர்.

கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில், புதிய கழிவு நீர் குழாய்களைப் பதிப்பதற்காகத் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்தத் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய மறைக்கப்பட்ட புதையல் அவர்களுக்குக் கிடைத்ததாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தங்கம் யாருக்குச் சொந்தமாகும் என்பதில் கவனம் குவிந்துள்ளது. அதைக் கண்டுபிடித்த தொழிலாளர்களும், அந்த வீட்டின் உரிமையாளரான உள்ளூர் தொண்டு நிறுவனமும் அதைக் கோருவதற்கான வாய்ப்புள்ளது.

இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதோடு, மேலும் புதையல் தேடும் ஆசையில் அந்த இடத்திற்குச் செல்ல நினைப்போருக்கு உள்ளூர் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த இடம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, தங்கம் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

By admin