• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

வெலிகொண்டா: மூழ்கும் கிராமத்துக்குள் இந்த மூவரும் சென்றது ஏன்? மரத்தின் மீது ஏறி தப்பித்தது எப்படி?

Byadmin

Sep 2, 2026


மூன்று பேரையும் காவலில் எடுத்த போலீசார்

பட மூலாதாரம், Venkateswar Reddy/Markapuram

படக்குறிப்பு, மூன்று பேரையும் காவலில் எடுத்த போலீசார்

    • எழுதியவர், கரிகாபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புல சுப்பையா வெலிகொண்டா திட்டத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கும் அபாயமுள்ள கிராமத்துக்குச் சென்ற மூன்று பேர், திடீர் நீரோட்டத்தில் சிக்கி சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி, திங்கள்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை மார்க்காபுரம் வருவாய் கோட்டாட்சியர் சிவராமி ரெட்டியும், துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகராஜும் பிபிசிக்கு விளக்கினர்.

ஆந்திரப் பிரதேசம் மார்க்காபுரம் அருகே அமைந்துள்ள வெலிகொண்டா திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகஸ்ட் 31ஆம் தேதி, திங்கள்கிழமை காலை முறைப்படித் தொடங்கி வைத்தார். அதற்கேற்ப, அத்திட்டத்தின் ஃபீடர் கால்வாய் மதகுகளைத் திறந்து கிருஷ்ணா நதி நீரை நல்லமல சாகருக்கு வெளியேற்றினர்.

இவ்வாறு தண்ணீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகலுக்குப் பிறகு மூழ்கும் அபாயமுள்ள கிராமங்களில் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

இந்நிலையில், மார்க்காபுரம் நகரைச் சேர்ந்த நாமாலா திருப்பதி நாயுடு (45), நல்லபோத்துல சீனு (40), பசுபுலேட்டி ரமணா (40) ஆகிய மூன்று பேரும், நீரில் மூழ்கவிருக்கும் கலனுட்டாலா கிராமத்தைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அங்கு சென்றனர்.

By admin