• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

‘வெள்ளம் வந்தபோது மக்கள் ஓடும் காணொளியில் இருப்பது தமிழர்கள்’ – சென்னையில் இருந்து சென்ற 49 பேரின் நிலை என்ன?

Byadmin

Aug 31, 2026


சென்னை விமான நிலையத்தில் 49 பேரில் ஒரு சிலர் எடுத்த புகைப்படம்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்து 5 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

சென்னையில் இருந்து தங்களது உறவினர்களைத் தேடிச் சென்ற 20-க்கும் மேற்பட்டோருக்கும் இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை என ஆன்மிகப் பயணத்தை ஏற்பாடு செய்த தனியார் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பல கிலோமீட்டர் தொலைவில் அடையாளம் காணப்படாத சடலங்கள் கிடைத்துள்ளதால், அவற்றை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

49 பேர் கொண்ட குழு

நேபாளத்தின் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பிலிருந்து மீண்ட தமிழ்நாட்டில் இருந்து சென்ற மற்றொரு குழுவை சேர்ந்த 21 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் வேறு ஒரு குழுவில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 29 பேர் இன்று (ஆகஸ்ட் 31) டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

By admin