• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

15 ஆம் திகதிக்கு பின்னர் மழை குறைவடையும் | வளிமண்டலவியல் திணைக்களம்

Byadmin

Aug 10, 2026


நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் மழைளுடனான வானிலை ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னரே படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,

தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை வானிலை அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்று தொடரும்.

இம்மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னரே மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமையானது அடுத்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலம் வரை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது வறட்சியான வானிலையை எதிர்கொண்டுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தொடர்ந்து நிலவும் வறட்சியான நிலைமையினால் அடுத்தடுத்த நாட்களில் காற்றின் வேகம் குறையக்கூடும்.

அத்துடன், வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதன் காரணமாக, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு உயர்ந்து வெப்பச் சுட்டெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நாட்டின் வானிலை மாற்றங்களைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

By admin