நிதியுதவி:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பங்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் அடங்குவர்.
பங்கா மாவட்டத்தின் பௌசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொராய் கிராமத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த குஷ்மி தேவி (45), ரிங்கு தேவி (35) மற்றும் ரேணு தேவி (38) ஆகியோர் வீட்டின் வெளியே இருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
பௌசி வட்டத்தைச் சேர்ந்த சிராய் கிராமவாசியான சுரேஷ் யாதவ், தனது வயலுக்குச் செல்லும் வழியில் குளம் ஒன்றின் அருகே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.