பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது:
ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பலை தாக்க முயன்றதை தொடர்ந்து, அமெரிக்கபடைகள் மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை அழித்த மூன்று நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஈரானிய அரசு தொலைக்காட்சியும் அமெரிக்க தாக்குதல்களை பற்றி செய்தி வெளியிட்டது. பாரசீக வளைகுடாவில் உள்ள தெற்கு துறைமுகமான ஜஸ்க் மற்றும் கார்க் தீவுக்கு அருகில் குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கியதாக அது கூறியது. மாலுமிகள் வெளியேற்றப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார்.
“ஈரான் தொடர்ந்து அமெரிக்க கடற்படை கப்பல்களை தாக்க முயற்சிக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் அவ்வாறு செய்யும்போது அல்லது செய்ய முயற்சிக்கும்போது, அவர்கள் எண்ணெய் கப்பல்களை இழக்க நேரிடும். இன்றும் நீங்கள் அதையே மீண்டும் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று கொலம்பியா பயணத்தின் போது ஈரானில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மார்கோ ரூபியோ கூறினார்.