• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

50 வயது ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேறு நாட்டுக்கு ‘கடத்தப்பட்ட’ 10 வயது சிறுமி – என்ன நடந்தது?

Byadmin

Aug 19, 2026


சில நாட்களுக்கு முன்பு, பெரு நாட்டிலிருந்து எல்லை தாண்டி கடத்தப்பட்டு, திருமணம் செய்து கொடுக்கப்படவிருந்த 10 வயது சிறுமி ஒருவரை மீட்டதாக ஈக்வடார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Ecuadorian Army

படக்குறிப்பு, ஈக்வடார் மற்றும் பெருவின் எல்லையில், 50 வயதுடைய ஒருவரிடம் ஒப்படைப்பதற்காகக் கடத்தப்பட்ட அந்தப் பெண் மீட்கப்பட்டார்; பின்னர் அவர் பிடிபட்டார்.

    • எழுதியவர், அலெஜான்ட்ரோ மில்லன் வலென்சியா
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சில நாட்களுக்கு முன்பு, ஈக்வடார் அதிகாரிகள் 10 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர். பெருவில் இருந்து எல்லை தாண்டி கடத்தி வரப்பட்ட அந்தச் சிறுமி, திருமணம் செய்து கொடுக்கப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈக்வடார் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவலின்படி, அமேசான் பகுதியில் உள்ள பாஸ்தாசாவில், டைக்ரே ஆற்றங்கரையில் அமைந்துள்ள எஸ்பெஹோ நகரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்த 50 வயது நபர் ஒருவர் அப்போது கைது செய்யப்பட்டார்.

சிறுமியை கட்டாயத் திருமணத்துக்கு உட்படுத்துவதற்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு மாத கால விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதியில் அதிகாரிகள் ஏற்கெனவே குழந்தைகள் கடத்தப்பட்ட மேலும் இரண்டு சம்பவங்களைக் கண்டறிந்திருந்தனர். இதன் மூலம், ஈக்வடாரின் இந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் லத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நீடித்து வரும் ஒரு பிரச்னை மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.

யுனிசெஃப் தரவுகளின்படி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் நான்கு குழந்தைகளில் ஒருவர், 18 வயதுக்கு முன்பே குழந்தைத் திருமணத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் அல்லது இளம் வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

By admin