சடலம்
சனிக்கிழமை அதிகாலை 1:10 மணியளவில், கட்டுமானத்தில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தளத்தில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர்.
அங்கு சிறுமியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவளது தலையில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.