மருத்துவர்கள் கட்டுப்படுத்த போராடி வரும் சுகாதார நெருக்கடி குறித்து அச்சமும் கோபமும் அதிகரித்து வரும் நிலையில், கிழக்கு காங்கோவில் எபோலா நோய் சிகிச்சை மையத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எபோலா நோய் பரவலின் மையமாக உள்ள நகரத்தில், உள்ளூர்வாசி ஒருவரின் உடலை மீட்க சென்றவர்கள் தடுக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள சிகிச்சை மையத்திற்கு மக்கள் தீ வைத்ததாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
ருவாம்பாராவில் நடந்த தீ வைப்பு தாக்குதல் சம்பவம், இறுதி சடங்குகள் போன்ற உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் முரண்படக்கூடிய கடுமையான நடவடிக்கைகளை பயன்படுத்தி, அரிதான எபோலா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் சுகாதார பணியாளர்கள் சந்திக்கும் சவால்களை பிரதிபலிக்கிறது.