• Sun. Jun 21st, 2026

24×7 Live News

Apdin News

IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய உலக சாதனை – என்ன நடக்கிறது?

Byadmin

Jun 21, 2026


வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா - இலங்கை, லிஸ்ட் ஏ கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏ அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் இலங்கை ஏ அணிகள் டம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற இலங்கை ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி சார்பில் ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இரு இளம் வீரர்களும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி முதல் ஓவரில், தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரி ஆக்கினார்.

வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா - இலங்கை, லிஸ்ட் ஏ கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

அதன் பின்னர் மூன்றாவது ஓவரில் மீண்டும் ஸ்ட்ரைக் எடுத்த சூர்யவன்ஷி முதல் பந்தை பவுண்டரிக்கும் அடுத்த இரண்டு பந்துகளை சிக்ஸருக்கும் விளாசினார். இலங்கை வீரர் முகமது ஷிராஸ் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 26 ரன்களை அவர் விளாசினார்.

By admin