• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

SK நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி முறைகேடு.. நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

Byadmin

May 9, 2026


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு ‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ மூலம் பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ‘கனா’, ‘நெஞ்​ச​முண்டு நேர்​மை​யுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்​டுக்​காளி’, ‘தாய்க்​கிழ​வி’ போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இதனையடுத்து அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் ‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ தயாரிப்பில் புதிய படம் ஒன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தி அவரது பெயரிலையே சிலர் மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக வாட்​ஸப் மெசேஜ்களை சமூக வலைத்தளத்தில் பகிர்த்துள்ள ‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்களை தேர்வு செய்யப்படுவது இயக்குநர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்​டிங் ஏஜென்ட்களோ அல்லது வேறொரு நபர்களோ தேர்ந்தெடுப்பதில்லை.

எஸ்கே புரொடக் ஷன்ஸ் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் வெளி​யிடப்​படும். இது தொடர்பாக வாட்​ஸ்​அப் செய்​தி​கள், மின்​னஞ்​சல்​கள், அழைப்​பு​கள் அல்லது சமூக வலைத்தளங்களை நம்ப வேண்டாம்.

‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.

By admin