• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

அகமதாபாத் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 தொழிலாளர்கள் பலி, 12 பேர் காயம்

Byadmin

Jul 19, 2026


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் பரிதாபகமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மஹ்மூத்புரா பகுதியில் இயங்கி வந்த மெஹுல் தோடியா என்பவருக்கு சொந்தமான டேலண்ட் பயர்ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தொழிலாளர்கள் இன்று பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிக்க முடியாமல் ஆலைக்குள்ளேயே சிக்கினர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

By admin