ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ், தமிழ்நாட்டின் முந்தைய திமுக அரசின் முதலீட்டு ஈர்ப்பு நடைமுறைகள் மிகவும் நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் இருந்ததாகப் பாராட்டியுள்ளார்.
தனியார் ஊடக நிகழ்வில் பேசிய அவர், அரசியல் களம் இரக்கமற்றதாக இருந்தாலும், தகுதியான விஷயங்களைப் பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டு இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,
“அரசியல் என்பது இரக்கமற்றது. முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் ஆந்திரா கடுமையாகப் போட்டியிட்டது. சில திட்டங்களை ஆந்திரா வென்றது, சிலவற்றை இழந்தது. ஆனால், திமுக அரசு தங்களிடம் லஞ்சம் கேட்டதாக எந்தவொரு முதலீட்டாளரும் புகார் கூறவில்லை.