• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

அலாஸ்காவில் ஏற்பட்ட பிரமாண்ட ‘மெகா சுனாமி’ – எப்படி உருவானது?

Byadmin

May 8, 2026


கடந்த கோடையில், அலாஸ்காவின் தென்கிழக்கில் உள்ள ஒரு தொலைதூரக் கடற்கரை இடுக்கில் வீசிய ராட்சத அலை, பெரும் அழிவை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Photo by Cyrus Read/U.S. Geological Survey

படக்குறிப்பு, ஆகஸ்ட் 2025-இல் அலாஸ்காவில் உள்ள சவுத் சாயர் பனிப்பாறைக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சுனாமியின் வான்வழித் தோற்றம்.

அலாஸ்கா மலையின் ஒரு பகுதி சரிந்து கடலில் விழுந்ததால் உருவான பிரமாண்டமான ‘மெகாசுனாமி’ அலை, இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் இரண்டாவது மிக உயரமான அலையாகக் கருதப்படுகின்றது. இது உருகி வரும் பனிப்பாறைகளால் ஏற்படும் அபாயங்களை நினைவூட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த கோடையில், அலாஸ்காவின் தென்கிழக்கில் உள்ள ஒரு தொலைதூரக் கடற்கரை இடுக்கில் ஏற்பட்ட ராட்சத அலை, பெரும் அழிவை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு அப்போது பெரிய அளவில் செய்திகளில் வரவில்லை, ஆனால் புதிய அறிவியல் பகுப்பாய்வு சிறிய நிலநடுக்கங்கள் ஒரு பெரிய நிலச்சரிவைத் தூண்டியதைக் காட்டுகிறது.

சுமார் 64 மில்லியன் கன மீட்டர் பாறைகள், அதாவது 24 எகிப்து பிரமிடுகளுக்கு இணையான அளவுள்ள பாறைகள் கீழே உள்ள நீரில் விழுந்தன. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இவ்வளவு பெரிய பாறைகள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட அபரிமிதமான ஆற்றல், கிட்டத்தட்ட 500 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட அலையை உருவாக்கியது.

அதிகாலை நேரத்தில் இது நிகழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் கப்பல்கள் இந்த பேரழிவில் சிக்காமல் தப்பின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

By admin