• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

‘அஸ்ஸலாமு அலைக்கும்’ சொன்னதால் இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்றமா? – முழு பின்னணி

Byadmin

Sep 17, 2026


மேற்கு வங்கம், பெண் ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, இஸ்லாம், இந்து மதம், இந்தியா

பட மூலாதாரம், Bushara Bano’s Facebook page

படக்குறிப்பு, 2021 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ, சர்ச்சைக்கு மத்தியில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ தற்போது செய்திகளில் இடம் பிடித்துள்ளார். சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், அவர் “அஸ்ஸலாமு அலைக்கும்”, “இன்ஷா அல்லாஹ்”, “ஜஸாக்கல்லாஹ்” போன்ற இஸ்லாமிய வாழ்த்துகள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 14 தேதியிட்ட அரசாணையின்படி, 2021 பேட்ச் ஐபிஎஸ் (இந்திய காவல் பணி) அதிகாரியான புஷ்ரா பானோ, மேற்கு மிட்னாபூரில் உள்ள கரக்பூரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மாநில ஆயுதப் படையின் 4வது பட்டாலியனின் துணை கமாண்டன்ட் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே உத்தரவில் மேலும் இரண்டு காவல் துறை அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணியிடமாற்றங்கள் ‘பொது நலன் கருதி’ எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு என அந்த அரசாணை விவரிக்கிறது.

அரசு அதிகாரிகள் இதை ‘வழக்கமான பணியிட மாற்றம்’ என்று விவரித்துள்ளனர். இருப்பினும், “புஷ்ரா பானோவுக்கு அநியாயமாக ‘கேரேஜ் போஸ்டிங்’ வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவரது முந்தைய பதவியைவிடக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ நௌஷாத் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, புஷ்ரா பானோவின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) போட்டித் தேர்வுக்குத் தயாராவது குறித்து அவர் பேசுவதைக் கேட்க முடிகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் உறைவிடப் பயிற்சி அகாடமி, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெண்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு உதவுவதாக அவர் கூறினார்.

By admin