• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆவணப்படம் குறித்து என்ன விவாதம்? பாகிஸ்தான் கூறியது என்ன?

Byadmin

Aug 18, 2026


2025 மே மாதம்: இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்களைத் தெரிவித்தபோது.

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, 2025 மே மாதம் இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்களைத் தெரிவித்தபோது.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே 2025 மே மாதம் நடைபெற்ற ராணுவ மோதல் முடிந்து ஓராண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், சில நாட்கள் மட்டுமே நீடித்த இந்த மோதல் தொடர்பான இரு நாடுகளின் நிலைப்பாடுகள் இன்றளவும் வேறுபட்டே உள்ளன.

இரு தரப்பினரும் தாங்கள்தான் வெற்றி பெற்றதாகக் கூறியதுடன், மோதலின்போது ஏற்பட்ட ராணுவ இழப்புகள் குறித்தும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான டிஸ்கவரி சேனலின் ‘டிக்ளாசிஃபைடு: ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ஆவணப்படம், இந்த மோதலை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா பெற்ற வெற்றிகள் குறித்து பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவான ஐஎஸ்பிஅர், இந்தக் கூற்றுகளை “தவறானவை, சர்ச்சைக்குரியவை, பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டவை” என்று கூறியுள்ளது.

By admin