கூட்டணியில் இல்லை
அதுபோல தவெகவின் கூட்டணியில் நாங்கள் இல்லை என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் தெரிவித்துள்ளார்.
தவெக அரசை சிபிஐ கட்சி வெளியில் இருந்து மட்டுமே ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் மட்டுமே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
தவெக அமைச்சர்கள் தங்களை வந்து சந்தித்தபோது அரசியல் குறித்துப் பேசினோம் என்றும், அவர்கள் தங்களை அமைச்சர்களாக அல்லாமல் தவெக நிர்வாகிகளாகவே சந்தித்தனர் என்றும் வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார்.