• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய பணக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவது ஏன்?

Byadmin

May 25, 2026


Sun Pharma, Newyork, Organan & Co

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஏப்ரல் மாத இறுதியில், இந்தியாவின் சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், பெண்கள் சுகாதார பொருட்கள் மற்றும் பயோசிமிலர் தயாரிக்கும் ஆர்கனான் அண்ட் கோ நிறுவனத்தை 11.75 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது

இது கடந்த இரு தசாப்தங்களில் ஓர் இந்திய நிறுவனம் செய்த மிகப்பெரிய வெளிநாட்டு கையகப்படுத்தல் ஆகும். சமீபத்திய மாதங்களில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களின் வரிசையில் இது இணைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இத்தாலியை சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஐவெகோவை 4.4 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஐடி நிறுவனமான கோஃபோர்ஜ், சிலிக்கான் வேலி சார்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான என்கோராவை 2.35 பில்லியன் டாலருக்கு வாங்கியது மற்றும் பஜாஜ் குழுமம் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்.இ-யின் 23 சதவீத பங்குகளை வாங்கியது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

கிராண்ட் தோர்ன்டன் ஆலோசனை நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் 162 இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு கையகப்படுத்தல்களுக்காக 18 பில்லியன் டாலருக்கும் மேல் செலவிட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 34 சதவீத வளர்ச்சியாகும்.

By admin