• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

இந்த இரு இந்திய பெண்களும் நேபாள எல்லை கடந்து சீனாவுக்குள் நுழைந்தார்களா?

Byadmin

Aug 29, 2026


இந்துக்களைப் பொறுத்தவரை, கைலாஷ் மலை சிவபெருமானின் இருப்பிடமாகவும் புனிதத் தலமாகவும் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Sudipto Bhattacharya/Dwaipayan Mukherjee

படக்குறிப்பு, சுபஸ்ரீ, ரீனா பானர்ஜி

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்திய செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சுபதீப் பட்டாச்சார்யாவுக்கு புதன்கிழமை அதிகாலை அவரது மனைவி சுபஸ்ரீ சக்ரவர்த்தியிடமிருந்து ஒரு செய்தி வந்தது.

காலை 7.57 மணிக்கு நேபாள எல்லையில் இருந்து வெளியேறியதற்கான முத்திரையுடன் தனது பாஸ்போர்ட்டின் புகைப்படத்தை அவர் அனுப்பியிருந்தார்.

இந்த வெளியேறும் முத்திரை, நேபாள எல்லையில் குடியேற்றச் சோதனை நடைமுறைகள் நிறைவடைந்துவிட்டதைக் குறிக்கிறது.

இந்தச் செய்தியைப் பெற்ற ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, காலை 8.03 மணிக்கு, “நாங்கள் சீனாவுக்குள் நுழைவதற்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர் மற்றொரு செய்தியை அனுப்பினார். அதன்பிறகு அவரிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.

சுபஸ்ரீ சக்ரவர்த்தியும் அவருடன் பயணம் செய்த குழுவினரும், தங்களது கைலாஷ் மலை யாத்திரையின் அடுத்த கட்டமாக திபெத்துக்குள் நுழைவதற்காகக் காத்திருந்தனர்.

By admin