• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு – அந்த சட்டப்பிரிவுகள் என்ன சொல்கின்றன, தண்டனை என்ன?

Byadmin

Aug 5, 2026


உதயநிதி

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தஞ்சையில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் “அவதூறாக பேசியதாக” சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு செவ்வாய்கிழமை காலையில் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர். மேலும், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், உதயநிதிக்கு முன் ஜாமீன் கோரி தொடரப்பட்ட மனு இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், உதயநிதியை இன்றே விடுவிக்க உத்தரவிட்டார்.

“உதயநிதியை விசாரணைக்குப் பிறகு இன்றே விடுவித்துவிட வேண்டும். முன்ஜாமீன் கோரும் மனு என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. காவல்துறை விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, தன் நீலாங்கரை இல்லத்தில் இருந்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, வெட்டி, ஒட்டி போலி செய்திகளை பரப்புகின்றனர். இன்று என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.” என்றார்.

By admin