• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

எத்தனால் பெட்ரோல் தொடர்பாக நிதின் கட்கரியை விமர்சித்த 4 சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

Byadmin

Jul 15, 2026


பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் நாக்பூர் நகரத் தலைவர் ஷிஷிர் திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் எத்தனால் பெட்ரோல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாகவும், நிதின் கட்கரியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவல்களைப் பரப்புதல், பொது அமைதியைக் குலைத்தல் மற்றும் மத்திய அமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மனிஷ் காஷ்யப், தேசி பாய்ஸ், ஹிர்ஷித் ரதி, அங்க்லேஷ் இன்வாதி ஆகியோர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

By admin