• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

நாகர்கோவில் காசி வழக்கு: மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை – உறுதிப்படுத்திய நீதிமன்றம்

Byadmin

Jul 15, 2026


நாகர்கோவில் காசி வழக்கு
படக்குறிப்பு, கோப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பல லட்சம் ரூபாயைப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த டி.காசி என்கிற சுஜிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

டிஜிட்டல் உலகில் தங்கள் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் இளம்பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்கிற சுஜி, சமூக ஊடகங்கள் மூலமாக பல்வேறு பெண்களிடம் பழகி அவர்களை வீடியோ, புகைப்படங்கள் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இந்தப் படங்களையும் வீடியோ காட்சிகளையும் காட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இதில் காசியால் பாதிக்கப்பட்டதாகக் கூறி 2020 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்தார்.

கன்னியாகுமாரி மாவட்ட எஸ்.பிக்கு மின்னஞ்சல் மூலமாக அவர் புகார் மனுவை அனுப்பியிருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய போலீசார், காசி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

By admin