• Sat. Jun 6th, 2026

24×7 Live News

Apdin News

எபோலா பரவலை எதிர்கொள்ள பெரிய தொகையை ஒதுக்கிய உலக சுகாதார அமைப்பு

Byadmin

Jun 6, 2026


“இந்த நோய் வேகமாக பரவி வருகிறது, நாம் இன்னும் அதை பின்தொடரவே முயன்று கொண்டிருக்கிறோம். எபோலாவைக் கட்டுப்படுத்த அரசியல் உறுதிப்பாடு, தொடர்ச்சியான நிதி மற்றும் சமூகத்தினரை ஈடுபடுத்துவதில் நம்பிக்கை ஆகியவை தேவைப்படுகின்றன,” என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயெசஸ் கூறினார்.

பல வாரங்களாக இந்த தொற்றுநோய் கண்டறியப்படாமல் இருந்ததால், சுகாதார அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர் என்று அதே செய்தியாளர் சந்திப்பில் ஆப்பிரிக்க சிடிசி கூறியது.

ஆப்பிரிக்க சிடிசி-யின்படி, காங்கோவில் இதுவரை 381 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது மற்றும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். உகாண்டாவில் 19 பேருக்கு நோய்த்தொற்றும், இரண்டு பேர் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

By admin