• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

எஸ்டெவானிகோ: அமெரிக்காவின் முதல் பெரும் ஆய்வாளரான ஒரு ஆப்ரிக்க அடிமையின் வரலாறு

Byadmin

Jul 5, 2026


எஸ்டெவானிகோ, அமெரிக்கா, 250 ஆண்டு சுதந்திர தினம்

பட மூலாதாரம், Granger

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மொராக்கோ நாட்டு மனிதர் புளோரிடாவிலிருந்து பசிபிக் கடற்கரை வரை ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, அமெரிக்காவின் மேற்குப் பகுதியைப் பார்த்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.

1528 இல், மொராக்கோவைச் சேர்ந்த ஒரு மனிதர் (தற்போதைய) டெக்சாஸ் கடற்கரையில் உயிருக்குப் போராடிய நிலையில் ஒதுங்கினார்.

மரத்தின் தண்டுகள், குதிரைத் தோல் மற்றும் கிழிந்த துணிகளின் எஞ்சிய பகுதிகளைக் கொண்டு தற்காலிகமாகக் கட்டப்பட்ட ஒரு பலவீனமான உயிர் காக்கும் படகில், ஸ்பானிஷ் மாலுமிகள் குழுவுடன் சேர்ந்து மெக்சிகோ வளைகுடாவில் அதற்கு முந்தைய மாதம் முழுவதும் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

ஒரு புயல் காரணமாக மெக்சிகோ வளைகுடாவின் கால்வெஸ்டன் அருகிலுள்ள ஒரு தீவில் அவர்கள் ஒதுங்கியபோது, அவர்களை அறியாமலேயே அமெரிக்க மேற்குப் பகுதிக்குள் நுழைந்த பழைய உலகத்தைச் சேர்ந்த முதல் மனிதர்களாயினர்.

அப்போது அவர்கள் ஒவ்வொருவரும் பசியோடும், சோர்வோடும், ஆடையின்றியும் இருந்தனர்.

By admin