நாகலாந்தில் ஐஇடி வெடிகுண்டு தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் வீரர் கொல்லப்பட்டார். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.
நாகலாந்து மாநிலத்தின் சுமுகேடிமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் வாகனத்தில் நேற்று சென்றுகொண்டிருந்தனர்.
தாக்குதல்
அப்போது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஇடி வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் வாகனத்தில் இருந்த ஹவில்தார் முகமது இக்பால் மற்றும் நால்வர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் முகமது இக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற நால்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.