இதில் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறும்போது, அமைதி பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இனி ஈரான்தான் முடிவு எடுக்க வேண்டும். ஈரானியர்கள் எங்களை சந்திக்கத் தயாராக இருந்தால் இரு நாடுகளுக்கும் மிகவும் நல்ல ஒரு ஒப்பந்தமாக இது அமையும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அங்கே எங்களைச் சந்திக்கத் தயாராக இல்லை என்றால் அது அவர்களுடைய விருப்பம்.
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க வேண்டும். எதிர்காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதன் மூலம் அந்நாடு பொருளாதார பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது என்றார்