கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த மே மாதம் 21ஆம் திகதி செய்தி வெளியாகியிருந்தது.
அதனையடுத்து, இன்று (28) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில் கனரக வாகனத்தின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு, கொட்டப்பட்டிருந்த குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டன.
குப்பைகளை அகற்றும் செயற்பாட்டினை துரித கதியில் முன்னெடுத்த மாநகர ஆணையாளர், இத்தகவலை வெளியிட்ட ஊடகங்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
The post கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் குப்பைகள் | எடுக்கப்பட்ட நடவடிக்கை appeared first on Vanakkam London.