• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத் கிர் சிங்கங்கள் ஏன் மனிதர்களை தாக்கத் தொடங்கின? 25 ஆண்டுகால இணை வாழ்வில் என்ன மாறியது?

Byadmin

Jul 13, 2026


கிர்ரின் மனிதர்களுடன் வாழ்ந்த சிங்கங்கள் இப்போது ஏன் மனிதர்களை தாக்கத் தொடங்கியுள்ளன?

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், கோபால் கடேஷியா
    • பதவி, பிபிசி குஜராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கிர் காட்டைச் சுற்றியுள்ள அம்ரேலி, பாவ்நகர் போன்ற மாவட்டங்களின் கிரேட்டர் கிர் என்று அழைக்கப்படும் பகுதியில், கடந்த ஆறு வாரங்களில் சிங்கங்கள் மனிதர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வளவு குறுகிய காலத்தில் சிங்கங்களின் தாக்குதல் என கூறப்படும் சம்பவங்களில் இத்தனை எண்ணிக்கையிலான மனித மரணங்கள் நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.

சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக அவை உணவு மற்றும் வாழ்விடத்தைத் தேடி காடுகளை விட்டு மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மனிதர்களுடன் அவை இணக்கமாக வாழ்வது பெரும்பாலும் சாத்தியமாகவே இருந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கிரேட்டர் கிர் பகுதியில் சிங்கங்கள், சிறுத்தைகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளும் மனிதர்களும் இணைந்து வாழும் முறை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு தனித்துவமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

By admin