இங்கிலாந்துக்கு 457 ரன்கள் இலக்கு
இதனால் இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. எமி ஜோன்ஸ் 52 ரன்களுடனும், எக்லெஸ்டோன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 4-வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. எமி ஜோன்ஸ் மேலும் 2 ரன்கள் சேர்த்து 54 ரன்களில் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இஸ்சி வாங் 1 ரன்னிலும், லாரன் பெல் ரன்ஏதும் எடுக்காமலும் சர்மா பந்தில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஷோபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடினார்.
கடைசி விக்கெட்டுக்கு இவருடன் லாரன் ஃபிலர் ஜோடி சேர்ந்தார். எக்லெஸ்டோன் அரைசதம் அடித்தார். 50 ரன்கள் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 186 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஸ்நே ராணா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.