• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

கௌரவ் தவே: உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்

Byadmin

Aug 3, 2026


மூளைச்சாவு, உறுப்பு தானம், கெளரவ் தவே

பட மூலாதாரம், Sameer Khan

    • எழுதியவர், சமீர் கான்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 25 வயதான கௌரவ் தவே, மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படுவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்த பிறகு, ஆழ்ந்த துயரத்தில் இருந்த அவரது தாய் கவிதா தவேவுக்கு, மகன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த அந்த விருப்பம் நினைவுக்கு வந்தது.

மகனின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்தனர். அந்த முடிவால் ஆறு பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

கௌரவ் தவேவின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தற்போது பிறருக்கு பயனளித்துள்ளன.

உடல் உறுப்பு தானத்தைப் பாராட்டும் வகையில், மத்தியப் பிரதேச முதல்வரின் உத்தரவின்பேரில், அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin