சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார். SENA (South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி அடித்த அரைசதம் SENA நாடுகளில் அவர் அடித்த 30-ஆவது அரைசதம் ஆகும்.
இதன் மூலம் விராட் கோலி SENA நாடுகளில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர் ஆகியுள்ளார். இதன் மூலம் இவர் ராகுல் டிராவிட் (29), சச்சின் டெண்டுல்கர் (25), எம்எஸ் தோனி (24) மற்றும் முகமது அசாருதீன் (17) ஆகியோரை முந்தியுள்ளார்.