• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

Byadmin

Jul 17, 2026


நாட்டில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாரம்பரிய முறையிலிருந்து விலகி வரலாற்றில் முதன்முறையாக பாடசாலைகளில் நிலவும் குறிப்பிட்ட பாட வெற்றிடங்களை இலக்காகக் கொண்டு (பாட அடிப்படையில்) ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முறையான ஆசிரியர் நியமனங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், நீண்டகாலமாக நிலவி வரும் கணிதம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக அந்தந்த பாடங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையே இந்த புதிய முறையின் கீழ் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு இணங்க, கடந்த மே மாதம் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு பட்டதாரிகள் உட்பட 180,000 தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர். தற்போது அதன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள உரிய நிதியொதுக்கீடுகள் மற்றும் அனுமதிகளுக்கு அமைய, 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் சுமார் 30,000 ஆசிரியர்கள் அவசரமாக பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவுள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக, அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரவையின் விசேட கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய தீர்வுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

By admin