• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

சாக்ரடா ஃபேமிலியா: உலகின் மிக உயரமான தேவாலயத்தின் கட்டுமானக் கலையின் அதிசயம்

Byadmin

Jun 11, 2026


 சக்ரடா ஃபெமிலியா தேவாலயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவின் சின்னமாகவும், மிக உயரமான தேவாலயமாகவும் விளங்கும் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம்

    • எழுதியவர், மார்த்தா ஹென்ரிக்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அந்தோணி கவுடி “கடவுளின் கட்டடக் கலைஞர்” என்று அறியப்பட்டார்.

மேலும் பார்சிலோனாவின் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயத்துக்காக அவர் வரைந்த பல நூற்றாண்டுகள் பழமையான வளைவு வடிவமைப்பு, அதனை உலகின் மற்ற தேவாலயங்களிலிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

இன்று, நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த தேவாலயம் மேலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.

1926 ஜூன் மாதத்தில், கலைந்த ஆடைகளை அணிந்திருந்த ஒரு முதியவர், தேவாலயத்துக்குச் செல்லும் வழியில் சாலையைக் கடக்கும்போது ஒரு டிராம் வண்டியில் மோதி கீழே விழுந்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் மருத்துவமனை ஒன்றில் இறந்தார்.

அந்த மனிதர் தான் “கடவுளின் கட்டடக் கலைஞர்” என்று பின்னர் அறியப்படவிருந்த அந்தோணி கவுடி ஆவார்.

By admin