5
ஈரான் போரின் தாக்கம் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்ணய இலக்கு 2%ஆக இருந்தாலும், தற்போது பணவீக்கம் 3% ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் நிதி கொள்கையில் மாற்றம் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தவும் சந்தையில் விலைவாசி அழுத்தத்தை குறைக்கவும் வங்கி அதிகாரிகள் இந்த முடிவை எடுக்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ECB வட்டி விகிதத்தில் முக்கியமான உயர்வை மேற்கொள்ளும் நிலை உருவாகும். தற்போது வட்டி விகிதம் 2.25% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட அதிக பணவீக்கத்தை சமாளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக ECB மீது விமர்சனங்கள் எழுந்திருந்தன. அந்த அனுபவத்திற்குப் பிறகு, தங்களின் நாணயக் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதில் வங்கி தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது.