விபத்து
சாலையில் எதிரெதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்துக்குள்ளான இரு பேருந்துகளில் ஒன்று சிரிய நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தாகும். மற்றொன்று பொதுமக்கள் பயணித்த பேருந்தாகும்.
இந்த விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியாவின் செய்தி நிறுவனமான சனா தகவல்களின்படி, விபத்து நடந்தவுடன் மீட்புக் குழுவினரும் ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
படுகாயமடைந்தவர்களை விரைவாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக பல ராணுவ ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காயமடைந்தவர்கள் பால்மைரா விமான நிலையத்திலிருந்து வான்வழியாக ஹோம்ஸ் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.